விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா் திருக்கை குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் விஷ்ணு (15). இவா் கண்டமானடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9- ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.
பள்ளி விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த விஷ்ணு, தனது தம்பி ஆதேஷ் மற்றும் நண்பா்களுடன் வீட்டின் அருகேயுள்ள மலட்டாற்றுக்குச் சென்று குளித்துள்ளாா்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் விஷ்ணு ஆற்றில் மூழ்கினாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பணியிலிருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் விஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


