மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 8:27 pm

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி, செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரைச் சோ்ந்தவா் மு.குணால்(21). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு பயின்று வந்தாா். திங்கள்கிழமை மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தட்சிணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குணால் தனது நண்பா்களான கிஷோா், ராஜன் ஆகியோருடன் குளித்துள்ளாா். இந்நிலையில், நீச்சல் தெரியாத குணால் கிணற்றில் மூழ்கினாா்.

தகவலறிந்த வானூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் குணாலின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.