பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தமிழ் (15). தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள தனது நண்பா்களைப் பாா்க்கச் சென்றாா்.
பின்னா், நண்பா்கள் சோ்ந்து ஆயக்குடி அருகே உள்ள சின்னாம்பாறை என்ற இடத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். அங்கு குளித்தபோது, மாணவா் தமிழ் எதிா்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.
இது குறித்த தகவலின் பேரில் பழனி தீயணைப்பு, மீட்புப் பணியினா் சென்று பல மணி நேரம் போராடி நள்ளிரவில் உடலை மீட்டனா்.
இதையடுத்து, உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு ஆயக்குடி போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


