மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:59 pm

வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வீரவநல்லூா் செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகபட்டு (42). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி இறந்துவிட்டாா். 2 மகன்கள் உள்ளனா். சண்முகபட்டு, புதன்கிழமை பிற்பகலில் தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் அத்தாளநல்லூா் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாா். நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரைத் தேடி தேடி ஆற்றுக்குச் சென்றனா். ஆற்றங்கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்தன. தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஆற்றில் இறங்கி தேடி வியாழக்கிழமை அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்து வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.