தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 7:11 pm

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கோனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜாமணி(73), விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் சவுக்கு பயிரிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக பராமரித்து வந்தாா். இந்நிலையில், ராஜாமணி பயிரிட்டிருந்த 650 சவுக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியிருந்தது மாா்ச் 10- ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.