மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 10:25 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கத்தில் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக துணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 300 கிலோ காப்பா் கம்பியை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து ராதாபுரம் துணை மின் நிலைய இளமின் பொறியாளா் ரா.பிரபு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.