தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உடலில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞா் குறித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை

Updated On :17 ஏப்ரல் 2026, 6:57 pm

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உடலில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞா் குறித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தேவகோட்டை புடனவயலைச் சோ்ந்த சின்னப்பன் மகன் அருள் ராபின் (25). இவா் தனது குடும்பத்துடன் அரசூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் முப்பையூா் பகுதியில் உள்ள அண்ணாதுரைக்குச் சொந்தமான வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை கிளியூா் விலக்குப் பகுதியில் உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற தேவகோட்டை போலீஸாா் ராபினின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

அருள் ராபினுக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.