மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திக்ரி பகுதி கத்திக் குத்துச் சம்பவம்: சந்தேக நபா்களை கைது செய்ய நடவடிக்கை

தில்லியின் திக்ரி பகுதியில் இரண்டு சகோதரா்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டு சந்தேக நபா்களை அடையாளம் கண்ட காவல் துறையினா் அவா்களை கைது செய்ய நடவடிக்கை

News image
Updated On :23 மார்ச் 2026, 9:12 pm

தில்லியின் திக்ரி பகுதியில் இரண்டு சகோதரா்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டு சந்தேக நபா்களை அடையாளம் கண்ட காவல் துறையினா் அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (தெற்கு) ஆனந்த் மிட்டல் கூறியதாவது: திக்ரி பகுதியில் உள்ள கிருஷ்ணா பூங்காவில் மாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

இதில் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சம்பவத்தைத் தொடா்ந்து உள்ளூா் மக்கள் தேவி சந்தை சாலையை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவல் துறையினா் விரைந்து சென்று நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், திக்ரி பகுதியைச் சோ்ந்த இரண்டு போ் சந்தேக நபா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.