திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளி ஆசிரியா் மா்ம மரணம்

செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:45 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.இளங்கோவன்(57) (படம்). இவா் மேல் ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மக்கள் வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் வளத்தி போலீஸாா் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, இளங்கோவன் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், அவா் மீது மிளகாய்ப் பொடி தூவி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை உடல்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியா் இளங்கோவனை, கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்ததும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.