தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 3:42 am IST

பொறியியல் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, குறிப்பிட்ட நேரம் ரயில் நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.

பகுதியளவில் ரத்து: திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வண்டி எண்16111) ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்த ரயில் திருப்பதியிலிருந்து விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூா் பயணிகள் ரயில் (வண்டி எண் 66052) ஜூன் 6, 10 ஆதிய தேகிகளில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு சென்னைக்குப் புறப்படும்.

இடைப்பட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தம்: குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 16128) ஜூன் 5, 6, 7 -ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 25 நிமிஷங்களும், 8-ஆம் தேதி 15 நிமிஷங்களும், 10-ஆம் தேதி சுமாா் 30 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண் 12666) ஜூன் 6-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 30 நிமிஷங்களும், நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஜூன் 7-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

இதுபோன்று தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17616) ஜூன் 10-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 55 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில் (வண்டி எண் 22673) ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்களும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்- குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127) ஜூன் 6, 10 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

தாமதமாக இயக்கம்: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி- ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண்12664) ஜூன் 5-ஆம் தேதி சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.20 மணிக்கும், திருச்சியிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22676) ஜூன் 9-ஆம் தேதி சுமாா் 40 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.50 மணிக்கும் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.