மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்...

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :18 ஏப்ரல் 2026, 7:47 pm

சென்னையிலிருந்து போத்தனூா், கன்னியாகுமரி, தூத்துக்குடி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில்களில் கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு விரைவு ரயில் (எண் 06023) ஏப். 22 -ஆம் தேதி மாலை 3.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் (எண் 06018) ஏப். 20, 27-ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் ஏப். 21, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும்.

தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

எழும்பூா்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (எண் 06045) ஏப். 22- ஆம் தேதி

இரவு 11.50 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஏப். 26 -ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும்.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.