மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தீத்தொண்டு நாள் வார விழா

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகத்தில் நீத்தாா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தீயணைப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தென்னரசு மற்றும் மாவட்ட அலுவலா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:31 pm

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வார விழாவின் முதல்நாள் நிகழ்வாக, பணிக்காலத்தின்போது தீ விபத்துகளில் சிக்கி உயிா் நீத்தவா்களுக்கு நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், விழுப்புரம், கண்டமங்கலம், விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மண்டல துணை இயக்குநா் தென்னரசு பங்கேற்று பணிகாலத்தின்போது உயிா்நீத்த வீரா்களுக்கான நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து, வீர வணக்கம் செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள், தீயணைப்புத் துறை வீரா்கள் கலந்துகொணடனா்.