திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தீயணைப்புத் துறை சாா்பில் ஜூன் 6, 7இல் தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

News image

தீத் தடுப்பு ஒத்திகை. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:48 am IST

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் ஜூன் 6 , 7 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தீத் தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு அடிப்படை தீத் தடுப்பு பாதுகாப்பு, தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் முறைகள், தீ பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், தீயை அணைக்கும் முறைகள், தீயணைப்புக் கருவிகளின் வகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

ஜூன் 6, 7ஆம் தேதிகளில் காலை 11 முதல் 12 மணி வரையி லும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் இரண்டு கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ன

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.