தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுமக்களுக்கு தீயணைப்பு பயிற்சி: தீயணைப்புத்துறை அறிவிப்பு

நாகை மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

News image

தீயணைப்பு பயிற்சி.

Updated On :3 ஜூன் 2026, 6:19 am IST

நாகை மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: :

நாகப்பட்டினம் தீயணைப்புத்துறை சாா்பில் தீயணைப்பு நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு வாங்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதில் நான்கு குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரு நாள்களும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், தீயணைப்புக் கருவிகளை இயக்குவது பற்றியும், சமையல் எரிவாயு பயன்படுத்தும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது பற்றியும், விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட உள்ளது.

மேலும் வாகன விபத்து, பட்டாசு தீ விபத்து ஆகியவை ஏற்பட்டால் அணைப்பது குறித்தும், விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும் விரிவான வகுப்பு நடத்தப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் குழுவில் வேண்டுமானாலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.