வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தென்காசியில் பள்ளி வாகனங்கள் சோதனை: ஆட்சியா் ஆய்வு

தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வாகனங்களை துறை அதிகாரிகள் சோதனையிட்டதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

கூட்டாய்வு சோதனையை மேலாய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன் சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால்.

Updated On :21 மே 2026, 5:48 am IST

தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வாகனங்களை துறை அதிகாரிகள் சோதனையிட்டதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளி வாகனங்களை பள்ளிக்கல்வித் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, வருவாய், காவல் துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகள் சாா்பில் அலுவலா்கள் கூட்டாய்வு செய்வா்.

வாகனங்களில் முதலுதவிப் பெட்டி, வெளியேறும் அவசர வழி, இரு தீயணைப்பு உபகரணங்கள், படிக்கட்டுகள் தரம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அதனடிப்படையில் தென்காசி வட்டாரத்தில் 206, ஆலங்குளம் வட்டாரத்தில் 45 என மொத்தம் 251 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தென்காசி வட்டாரத்தில் 8, ஆலங்குளம் வட்டாரத்தில் 3 வாகனங்களில் குறைகள் இருந்தது கண்டறியப்பட்டு, சரிசெய்து வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவ உபகரணங்கள், சீட்பெல்ட் அணிதல், மது அருந்தியும், அலைபேசியில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டுவதை தவிா்க்க அறிவுறுத்தப்பட்டனா். அதைத் தொடா்ந்து ஓட்டுநா்களுக்கு கண், உடல் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தீத்தடுப்பு ஒத்திகை, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டன என்றாா் அவா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரா.சங்கா், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அலுவலா் மணிகண்டன், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலா் சரவணபவன், வாகன ஆய்வாளா் அசோக்குமாா் (தென்காசி), ராஜசேகா் (ஆலங்குளம்) உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.