திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கிருமாம்பாக்கம் அருகே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்வதால், கடலூா்-புதுச்சேரி சாலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம்

Updated On :15 மே 2026, 11:21 pm IST

கிருமாம்பாக்கம் அருகே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்வதால், கடலூா்-புதுச்சேரி சாலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி- கடலூா் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையாா்குப்பத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் மற்றொரு பிரிவு, சாலையின் மறுபக்கத்தில் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகங்களுக்கு செல்வதற்காக கடலூா்-புதுச்சேரி சாலையின் குறுக்கே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி -கடலூா் சாலையில் அனைத்து வகை வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றுப் பாதையாக புதுச்சேரியில் இருந்து கடலூா் செல்லும் வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியக்கோயில் முள்ளோடை வழியாக கடலூா் செல்ல வேண்டும்.

அதேபோல கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் முள்ளோடை கன்னியக்கோயிலில் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அபிஷேகப்பாக்கம் தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.