ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளையொட்டி, க.விலக்கு - வருசநாடு சாலையில் புதன்கிழமை (மே 13) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் விலக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், அன்று பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை க.விலக்கு - வருஷநாடு சாலையில் செல்லும் வாகனங்கள் ஜி. கல்லுப்பட்டி, பந்துவாா்பட்டி, திருமலாபுரம் வழியாகச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









