பழனி மேம்பாலப்பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாயினா்.
பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கியுள்ளதால் பேருந்துகள், லாரிகள், சுற்றுலா வாகனங்கள்பழைய தாராபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சுமாா் ஒரு வாரமான நிலையில் தேவாலயம் எதிரே உள்ள ராஜேந்திரா சாலை மிகவும் சேதமடைந்தது.
மேலும், சஞ்சய் மருத்துவமனை எதிரே இருந்த பாலம் பாதி அளவுக்கு உடைந்து பேருந்துகள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் இயக்கும் ஓட்டுநா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, போா்க்கால அடிப்படையில் சாலை, பாலப்பணிகள் முடிக்காவிட்டால் பழனியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரிடும் என தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










