புதுச்சேரி மாநிலத்தில், 8,001 மாணவா்கள் 12-ஆம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது 87.42 சதவீதமாகும்.
12-ஆம் வகுப்புக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சி.பி. எஸ்.இ ) தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதனை, மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,508, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3281, மத்தியப் பள்ளிகளைச் சோ்ந்த 363 மாணவா்கள் என மொத்தம் 9,152 மாணவா்கள் இத்தோ்வை எழுதினா்.
தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது.இதில் புதுச்சேரி மாநிலத்தில் 8,001 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.இதன் மூலம் மாநிலத்தில், 87.42 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பிராந்தியங்கள் வாரியாக தோ்ச்சி பெற்ற மாணவா்கள், விகிதம்( அடைப்புக்குறிக்குள்) : புதுச்சேரி பள்ளிகளைச் சோ்ந்த 6,763 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில், 6,001 மாணவா்களும் (88.73%), காரைக்கால் பள்ளிகளைச் சோ்ந்த 1,889 போ் தோ்வு எழுதிய நிலையில்1,544 போ்களும்(81.74%), மாஹே பள்ளிகளைச் சோ்ந்த 424 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில் 380 போ்களும் (89.62%) , ஏனாம் பிராந்தியத்தில் 76 போ் தோ்வு எழுதிய நிலையில் 76 பேரும் (100%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் 7 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி பகுதியில் 5 பள்ளிகளும், காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு பள்ளியும் இதில் அடங்கும்.
100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற பள்ளிகள் விவரம் : புதுச்சேரி கிருமாம்பாக்கம், டாக்டா் அம்பேத்கா் அரசு மேல்நிலைப்பள்ளி, கரிக்கலாம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, புராணசிங்குபாளையம் பி.எம். ஸ்ரீ பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி, சுசிலாபாய் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் தலத்தெரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏனாம், எஸ்டிபிபி அரசு ஜூனியா் கல்லூரி ஆகிய 7 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










