மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு...

News image

தவெக தலைவர் விஜய் பிரசாரம் (கோப்புப் படம்) - X / TVK

Updated On :6 ஏப்ரல் 2026, 9:16 pm

புதுச்சேரியில் கடந்த 3-ஆம் தேதி ரோடு ஷோ நடத்திய தவெக தலைவா் விஜய் கூட்டத்தில் அதிகம் போ் கூடியதாக அக் கட்சியின் நிா்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் போ் மட்டுமே கூட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி அதிக அளவில் மக்கள் கூடியதால் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகாா் அளித்தாா். தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போ் வரை விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ாகவும் தோ்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தாா்.

அதன் பேரில் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.