மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:01 pm

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சி அருகேயுள்ள பஞ்சம்தாங்கி கிராமத்தில் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் மலா்விழி தனது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

இதில், அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சிறாா்களை பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி அளித்தப் புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.