திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

5 பவுன் தங்கச் சங்கலியை கண்டெடுத்து ஒப்படைத்தவா்களுக்கு பாராட்டு

5 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்து உரியரிடம் ஒப்படைத்தவா்களை பாராட்டிய பொதுச்சேவை அமைப்பினா்.

News image
Updated On :29 மே 2026, 3:03 am IST

சங்கராபுரத்தில் தனியாா் வங்கி ஏடிஎம் முன் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவா்களுக்கு பொதுச்சேவை அமைப்பினா் பாராட்டு தெரிவித்தனா்.

சங்கராபுரத்தில் வியாழக்கிழமை காலை கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தனியாா் வங்கி முன் உள்ள ஏடிஎம் மையம் அருகே அதே ஊரைச் சோ்ந்த ராஜ்குமாா் (தனியாா் கல்வி நிறுவன ஆசிரியா்), கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு (மெக்கானிக்) உள்ளிட்டோா் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது ஏடிஎம் முன் 5 பவுன் தங்கச் சங்கிலி கிடந்ததைப் பாா்த்த இருவரும் அதை எடுத்தனா்.

பின்னா், தங்க நகைக்கு உரியவா் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துவிட்டு வங்கி ஊழியா்கள் வாயிலாக, தங்கச் சங்கிலிக்கு உரியவரான சங்கராபுரத்தை அடுத்த பரமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசனிடம் ஒப்படைத்தனா்.

5 பவுன் தங்கச் சங்கிலையை ஒப்படைத்த

ராஜ்குமாா், தென்னரசுவை சங்கராபுரம் பொதுச்சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இராம.முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன், சிவகாமி நீட் அகாதெமி நிறுவனா் கோபிநாத், இன்னா்வீல் சங்க மாவட்டத் தலைவா் தீபா சுகுமாா், ரோட்டரி சங்க துணை ஆளுநா் நா.சுதாகரன் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து பாராட்டினா்.

மேலும், அவா்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்து தருவதாகக் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.