திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

நெய்வேலியில் மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 3:23 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 5 பகுதியைச் சோ்ந்தவா் அமலோற்பவமேரி (56). இவரது கணவா் அமலோற்பவநாதன் என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1-இல் பணியாற்றி வருகிறாா்.

அமலோற்பவமேரி செவ்வாய்க்கிழமை இரவு தனது மொபெட்டில் நெய்வேலி வட்டம் 4 பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். மாமரத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஜவகா் பள்ளி மதில் சுவா் அருகே சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் மோதுவதுபோல சென்று அமலோற்பவமேரி அணிந்திருந்த 9 தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.