தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:45 am IST

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி இலுப்பூா் சாலை ஐயப்பா நகரைச் சோ்ந்த 51 வயது பெண், கே.கே.நகரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 போ் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களில் ஒருவா் வாகனத்தில் இருந்து இறங்கி கடைக்குள் சென்று பொருள்களின் விலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத நேரத்தில் கடையிலிருந்த முட்டையை எடுத்து, அப்பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மூவரும் தப்பினா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.