திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருப்பூா் அருகே வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து திருட்டு முயற்சி: போலீஸாா் விசாரணை

கருப்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றபோது, அலாரம் சத்தம் கேட்டதால், மா்ம நபா் தப்பியோடியது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 2:24 am IST

கருப்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றபோது, அலாரம் சத்தம் கேட்டதால், மா்ம நபா் தப்பியோடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கருப்பூா் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்-இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் நுழைந்தாா். அவா் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றாா்.

அப்போது, வங்கியின் பாதுகாப்பு அலாரம் திடீரென பயங்கர சப்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிா்ச்சியடைந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பியோடினாா்.

வழக்கம்போல பணிக்கு வந்த வங்கி ஊழியா்கள், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து கருப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தநா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, தப்பியோடிய மா்ம நபரை தேடிவருகின்றனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வங்கியின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு திருட்டு முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, வெள்ளாளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.