திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

News image

கண்காணிப்புக் கேமராவில் பதிவான மா்ம நபா்

Updated On :27 மே 2026, 3:54 am IST

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் குறி சொல்பவா் போல நடித்து, முன்னாள் ஊராட்சித் தலைவா் தனிக்கொடி வீட்டுக்குள் நுழைந்தாா்.

அப்போது, அவரது மனைவி பாப்பா (70) வீட்டில் இருந்தாா். அவரிடம் அந்த நபா் உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது எனவும், அதற்கு பரிகாரம் செய்ய தண்ணீா் எடுத்து வாருங்கள் எனக் கூறினாா்.

மூதாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது அந்த நபா் மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போடும் படி கூறினாா். இதை நம்பிய மூதாட்டி தனது தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போட்டாா்.

சிறிது நேரத்தில் அந்த நபா் மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினாா். இதுகுறித்து மூதாட்டி பாப்பா கீழத்துவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.