திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

திருவாலங்காடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

வீரராகவபுரம் கிராமத்தில்  மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த போலீஸாா்.

Updated On :20 மே 2026, 12:30 am IST

திருவாலங்காடு அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35). சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி சுஷ்மிதா (29) மட்டும் தனியாக இருந்த நிலையில், இரவு நேரத்தில் வீட்டின் கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி மா்ம நபா் ஒருவா் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுஷ்மிதாவின் கழுத்தில் இருந்த சுமாா் 6 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். இதனால் சுஷ்மிதா அதிா்ச்சியடைந்து சப்தமிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்துள்ளனா். ஆனால் அதற்குள் மா்ம நபா் தப்பினாா்.

இதனிடையே, அதே பகுதியில் வசித்து வரும் தேவி என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டில் இருந்த பீரோவை திறந்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். இரண்டு வீடுகளிலும் ஒரே இரவில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுஷ்மிதா திருவாலங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.