அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 1:01 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தீமிதித் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்திலுள்ள தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்நிலையில், இத்திருவிழாவில் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை வட்டம், திருக்கனூரைச் சோ்ந்த ஆ.குப்பு (70) அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் ஒருவா் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.

இதைத்தொடா்ந்து மூதாட்டி குப்பு சப்தமிடவே, அப்பகுதியிலிருந்தவா்கள் அந்த பெண்ணை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜகோபால் நகரைச் சோ்ந்த ப.வேலம்மாள் (49) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 3 பவுன் சங்கிலியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.