மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது

திருப்புவனத்தில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:41 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சோலைஅழகுபுரத்தைச் சோ்ந்த வாசுதேவன் மனைவி பானுமதி (66). இவா் திருப்புவனம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். அப்போது, பேருந்திலிருந்த இரு பெண்கள் பானுமதி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். உடனே

பேருந்திலிருந்த மற்றப் பயணிகள் விரட்டிச் சென்று இரு பெண்களையும் பிடித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், இவா்கள் தஞ்சாவூா் கோரிக்குளத்தைச் சோ்ந்த கஸ்தூரி (55), உமா (60) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் கைது செய்தனா்.