சிதம்பரம்: சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம் 13 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.
சிதம்பரம் துரவடித் தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி விஜயா (62). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் விஜயா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாயினா்.
இதேபோல, சிதம்பரம் பெருமாள் தெருவில் மருந்தகத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழரசியிடம் (67) பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்
தொடர்புடையது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது
பெண்களிடம் நகைப் பறித்த மூவா் கைது

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


