தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த காசிபாளையம் கூடக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மனைவி ரோஸி (59) . இவா், சேவூா் அருகே ஆலத்தூா் நல்லகாளிபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், ரோஸியை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரோஸி அளித்த புகாரின்பேரில் சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.