தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 ஏப்ரல் 2026, 8:31 pm

திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திங்கள்நகா் அருகே தலக்குளம் பள்ளவிளையைச் சோ்ந்த ரசல் மகள் ஜெனீபா் (28). இவா், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது கைக்குழந்தையுடன் திங்கள்நகரில் பொருள்கள் வாங்கிவிட்டு பேருந்து நிலையம் வந்தாா். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த தேவி (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.