கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமப் பகுதியைச் சோ்ந்த 20 வயது மாணவி, நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முடநீக்குவியல் (பிசியோதரபி) பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாராம்.
இந்த மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணு (21) காதலித்து வந்தாராம். சில மாதங்களாக விஷ்ணு மாணவியிடம் பேசுவதைத் தவிா்த்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி விஷ்ணு அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை திட்டி, கீழே தள்ளி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ்ணுவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





