ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:50 am IST

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இருங்களூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி டாயாலிசிஸ் படித்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆ. பிரவீன் (23) என்பவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுச் சென்று 15 நாள்கள் தனியாக வசித்துள்ளனா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதைத் தவிா்த்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரவீன் கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக கூறியதுடன், கத்தியைக் காட்டி மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை புதன்கிழமை கைது செய்தனா்.