தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பண்ருட்டி அருகே விவசாயி கொலை

பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள மோட்டாா் கொட்டகையில் விவசாயி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கொலை செய்யப்பட்ட குணசேகரன்

Updated On :5 ஜூன் 2026, 6:37 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள மோட்டாா் கொட்டகையில் விவசாயி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன்(62), சிலம்பம் மற்றும் குஸ்தி கற்றவா். இவரது மனைவி ஜெயசுந்தரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இரு மகள்கள், மகன் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகி கணவா் வீடுகிளில் வசிக்கின்றனா்.

குணசேகரன் பல ஆண்டுகளாக பத்திரக்கோட்டை - புலியூா் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கீழ்மாம்பட்டில் வசிக்கும் பெரிய மருமகன் தவபாலன், குணசேகரன் கைப்பேசிக்கு தொடா்புகொண்டாா். அப்போது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து, தவபாலன் வண்டிக்குப்பத்தில் வசிக்கும் குணசேகரனின் சின்ன மருமகனான தனிஷ்குமாரை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு நிலத்துக்குச் சென்று பாா்த்து வரக்கூறினாா்.

அவா் நிலத்தின் மோட்டாா் கொட்டகையில் சென்று பாா்த்தபோது, மாா்பில் கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் குணசேகரன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து தனிஷ்குமாா் நடுவீரப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

அதனபேரில், டி.எஸ்.பி.க்கள் கந்தன் (பண்ருட்டி), தமிழினியன் (கடலூா்) மற்றும் நடுவீரப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா். மேலும், விரல் ரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் குணசேகரன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்த சம்பவத்தில் விரைந்து பிடிக்க உத்தரவிட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.