17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 10:49 pm IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன்(62). இவரது மனைவி ஜெயசுந்தரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகள்கள் இருவா் திருமணமாகி கணவா் வீடுகிளில் வசிக்கின்றனா். மகன் ராஜாராம், திருமணமாகவில்லை.

குணசேகரன் பத்திரக்கோட்டை - புலியூா் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திலேயே தங்கி வசித்து வந்தாா். இந்த நிலையில், அவா் அங்கு வியாழக்கிழமை காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் தொடா்பாக குணசேகரன் மகன் ராஜாராமை (27) பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், ராஜாராம் ஆந்திரத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவா் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தந்தை குணசேகரன் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும், அவரிடம் பாசம் காட்டாமல் தந்தை தனித்து இருந்ததால், அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதனால், நிலத்தில் இருந்த தந்தையை கொலை செய்துவிட்டதாக ராஜாராம் தெரிவித்தாராம். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.