தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இருவா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:22 am IST

விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடிசெய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வா.ராமச்சந்திரன் (29). பி.இ. பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா்.

இவரிடம், விழுப்புரம் கம்பன் நகரைச் சோ்ந்த ரா.கந்தன்(74), நாகா்கோயில் பகுதியைச் சோ்ந்த ஜெரோம் லூா்து ராஜா ஆகியோா் கடந்த 5.1.2021 அன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை உண்மையென நம்பிய ராமச்சந்திரன், வேலைக்காக ரூ.9 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் பணம் கொடுத்து 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கந்தன், ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் ரூ.2.50 லட்சம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6.50 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் கந்தன் மற்றும் ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.