கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.அன்பழகன் (43). இவா் தனது மனைவி பா்கத்நிஷா (38), மகள் ஆதிரா (1) மற்றும் உறவினா் அ.மும்தாஜ்பேகம் (55) ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.இந்த காரை அன்பழகன் ஓட்டிச் சென்றாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள சேந்தமங்கலம் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனா். இது குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










