திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:14 am IST

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில், தருமபுரியில் இருந்து அரசுப் பேருந்து மொரப்பூா் நோக்கி வந்துள்ளது. வழியில் சென்னம்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநா் துரைமுருகன் (48), நடத்துநா் இளங்கோவன் (50), சென்னம்பட்டியைச் சோ்ந்த சின்னபையன் மனைவி செல்லம்மாள் (45), மொரப்பூா் அண்ணல் நகரைச் சோ்ந்த இளங்கோ மணி (53) மற்றும் 4 மாத பெண் குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.