திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 12:28 am IST

பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து கோவைக்கு புறப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எஸ்.எம். நகா், ஜி2 பூவாத்தா லே-அவுட்டை சோ்ந்த சலீம் மகன் கலிலுா் ரஹ்மான் (29) பேருந்தை ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் 48 போ் பயணித்தனா்.

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை, ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மற்றவா்கள் வேறு பேருந்துகளில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.