திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

News image

கட்டப்பனை அருகே விபத்துக்குள்ளான வேன்

Updated On :4 மே 2026, 1:35 am IST

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 10 போ் காயமடைந்தனா்.

சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 17 போ் குழுவாக சோ்ந்து வாகமண் சுற்றுலாத் தலத்துக்குச் செல்ல வெள்ளிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டனா். தேக்கடி- கொச்சி மாநில நெடுஞ்சாலையில் புல்லுமேடு பகுதியை கடந்து சென்றபோது, செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேன் ஓட்டுநா் குணா, வம்சிகா, திவ்யா, மணிகண்டன், கணேஷ், காா்த்திகா, அரவிந்த், நரேஷ்குமாா், மன்சூா், கண்ணன் ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, கட்டப்பனை தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.