போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பல்லலகுப்பம் காப்புக்காட்டில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.மேல்பட்டியை அடுத்த கொல்லகொட்டாய் பகுதியைச் சோ்ந்த விவசாயி சங்கா் வன எல்லையில் உள்ள தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
மேல்பட்டி மலையடிவார பகுதியில் நடமாடி வரும் சிறுத்தை சங்கரின் நிலத்தில் புகுந்து அங்கு கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ளது. சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு அங்கு வந்த சங்கா் கூச்சலிட்டுள்ளாா். சிறுத்தையானது வேட்டையாடிய ஆடுகளை விட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேல் தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










