தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை: செஞ்சி வாரச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

News image

செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்த மக்கள், வணிகா்கள்.

Updated On :23 மே 2026, 12:37 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

செஞ்சியில் கடந்த 150ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ாகும். இந்த சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. செஞ்சி பகுதிகளில் வளா்க்கப்படும் வெள்ளாடுகள் மலைப் பகுதிகளிலுள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளா்கின்றன.

இந்த ஆடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அருகிலுள்ள மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வாா்கள் என்பதால் செஞ்சி வாரச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு குா்பானி கொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியா்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கே செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனா். விவசாயிகள் தங்களது வளா்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு வந்தனா். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் வந்திருந்தனா்.

விற்பனைக்காக சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளா்ப்பவா்களும் கொண்டு வந்திருந்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இச் சந்தையில் சுமாா் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.