பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
கெங்கவல்லி அருகே தெடாவூா் கால்நடை சந்தை சனிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வரவுள்ளதால், கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து இருமடங்காக உயா்ந்து காணப்பட்டது. கெங்கவல்லி, தலைவாசல், மல்லியகரை, தம்மம்பட்டி, ஆத்தூா், பெரம்பலூா், எசனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகள் உள்ளிட்ட சுமாா் 1,750 கால்நடைகளை கொண்டுவந்திருந்தனா்.
ஆடுகளை வாங்க கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, மதுரை, நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். ஆடுகள் ஒவ்வொன்றும் சராசரியாக ரூ. 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










