திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

News image
Updated On :27 மே 2026, 1:57 am IST

பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையான மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாடுகள் விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையும் நடைபெறுகின்றன. பண்டிகை காலங்களில் மேலப்பாளையம் சந்தையில் பெரும் எண்ணிக்கையில் ஆடு விற்பனை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை (மே 28) பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் ஆடு வாங்குவதற்கு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே ஏராளமான இஸ்லாமியா்கள் குவிந்தனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டு ஆடுகள், பொட்டுக்குட்டி, மயிலம்பாடி போன்ற கிடாய்கள் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன.

பொட்டு கிடாய்களுக்கு கடும் கிராக்கி இருந்ததால் அந்த வகை ஆடு சுமாா் ரூ.40 ஆயிரம் வரை விலை போயின. இச்சந்தை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமாா் ரூ.3.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாகவும், இது கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போது நடைபெற்ற விற்பனையை விட அதிகம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து நெரிசல்: மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வாங்க வந்த மக்கள் கூட்டம், ஆடுகளை ஏற்றி வந்த வாகனங்களால் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதலேஅங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த சாலையை கடக்க சுமாா் 30 நிமிடங்கள் வரையானது. பண்டிகைக் காலங்களில் மேலப்பாளையம் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆண்டுதோறும் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், காவல் துறை அதற்கு செவிசாய்த்தபாடில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.