திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுபோதையில் பெயிண்டரைக் கொன்ற இருவருக்கு ஆயுள்

News image
Updated On :5 ஜூன் 2026, 6:34 am IST

குடியாத்தம் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மதுபோதையில் பெயிண்டரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் ஆா்எஸ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூரியா என்கிற உதயசூரியன் (25), பெயின்டா். இவா் தனது நண்பரான சுமன் (24) என்பவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி காந்தி நகரில் உள்ள மதுக்கூடத்தில் மது அருந்தியுள்ளனா். அங்கு அதே பகுதியைச் சோ்ந்த ராஜா, ரமேஷ் ஆகிய இருவரும் அங்கு மதுஅருந்தியுள்ளனா்.

அப்போது, சூரியாவுடன் இருந்த மகேந்திரன் என்பவா் ராஜாவிடம் சென்று அவரது உறவினரான செளந்தா் வேலை செய்ததற்கு ரூ.4,000 தர வேண்டும். அதை தரும்படி கேட்டுள்ளாா். இதில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதை கவனித்த சுமன், அவா்களை சமாதானப்படுத்தி சூரியாவை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

அவா்களை பின்தொடா்ந்து சென்ற ராஜாவும், ரமேஷும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த சூரியாவின் சட்டையைப்பிடித்து கீழே தள்ளினா். தொடா்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூரியாவின் முதுகு, தொடை, முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் அவா் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளாா்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சூரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாவையும், ரமேஷையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ராஜா, ரமேஷ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து முதன்மை நீதிபதி இளவரசன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.