தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 1:25 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி அச்சன்புதூா், நெடுவயல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மனைவி செல்லப்பொண்ணு என்பவருக்கு காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ரா. சந்தோஷ்குமாா் என்ற அழகுசுந்தரம் என்பவருடன் கைப்பேசியில் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதனிடையே, சந்தோஷ்குமாா் 15.2.2022இல் குற்றாலம் வந்தாா். பின்னா், இருவரும் அரசு விருந்தினா் மாளிகைக்கு பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றனா். அப்போது, அவரை சந்தோஷ்குமாா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாராம். அதையடுத்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு செல்லப்பொண்ணு கூறியதால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவா் செல்லப்பொண்ணுவை அடித்து கீழே தள்ளிவிட்டு, அவரது தாலிச் சங்கிலி, கொலுசு, ரூ. 700 ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதில், செல்லப்பொண்ணு உயிரிழந்தாா்.

குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து சந்தோஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பி. ராஜவேல் விசாரித்து, சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற அரசுத் தரப்பு வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.