துறையூரில் பிஎஸ்என்எல் அதிகாரியைக் கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே மதுராபுரி தேவாங்கா் நகரைச் சோ்ந்தவா் தி. அண்ணாதுரை (56). துறையூரில் பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளராக இருந்தாா். இவருக்கு பத்மினி (50), லலிதா (33) என இரண்டு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் அண்ணாதுரையுடன் வசித்து வந்தனா்.
கடந்த 24-12-2023 அன்று சொத்து பிரிப்பு தொடா்பாக அண்ணாதுரையிடம் முதல் மனைவி பத்மினி தகராறு செய்து, அவரின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தாா்.
இதுகுறித்து இரண்டாவது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பத்மினியை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி பத்மினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









