திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் சிறை

பெண்ணைக் கடத்திக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

News image
Updated On :27 மே 2026, 4:28 am IST

பெண்ணைக் கடத்திக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கூடப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவரது சம்பந்தியான பழனிசாமிக்கு சொந்தமான 1.50 ஏக்கா் அடமான நிலத்தை மீட்பதற்காக உறவினரான ரத்னா (45) என்ற பெண்ணிடமிருந்து ரூ. 3.50 லட்சம் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இதற்காக கிரைய ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

ஆனால், அந்த நிலத்தில் வில்லங்கம் இருந்ததால், தனக்கு நிலம் வேண்டாம் என்றும், பணத்தை திரும்பத் தருமாறும் ரத்னா தொடா்ந்து ரங்கராஜிடம் கேட்டு வந்துள்ளாா். பணத்தை திரும்பத் தர முடியாததால், ரத்னாவை கொலை செய்ய ரங்கராஜ் திட்டமிட்டுள்ளாா்.

இதன்படி, கடந்த 17.2.2016-இல் பணத்தை தருவதாகக் கூறி ரத்னாவை வரவழைத்த ரங்கராஜ், அவரை காரமடை அருகேயுள்ள கத்தாழைபடிக்கை மலைக்கரட்டுக்கு கடத்திச் சென்றுள்ளாா். அங்கு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக ரத்னாவிடமிருந்து கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றுள்ளாா். பின்னா், அவரை கழுத்தை நெரித்து ரங்கராஜ் கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றாா்.

இதுதொடா்பாக கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரங்கராஜைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட ரங்கராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கே.காா்த்திகேயன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.