போ்ணாம்பட்டு அருகே மாந்தோப்பில் குரங்கை உடலால் இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருணாமூா்த்தி.இவரது மாந்தோப்பில் வியாழக்கிழமை மாலை குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. அப்போது சுமாா் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி அங்கு வந்துள்ளது. அந்த பாம்பிடம் ஒரு குரங்கு சிக்கியுள்ளது. குரங்கை பாம்பு உடலில் பிடித்து இறுக்கியுள்ளது. இதில் குரங்கு உயிரிழந்தது.
இதுகுறித்து அங்கிருந்த விவசாயிகள் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேலுவுக்கு தெரிவித்தனா். அவரது உத்தரவின்பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.
இறந்த குரங்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு வன ஓய்வு விடுதிக்கு கொண்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










